Thursday, September 5, 2013

அண்ணன் கல்யானசுந்தரத்தின் கவிதை..




உலகம் முழுவதையும்  ஆரத்தழுவி
ஆரவனைத்த செம்மொழி எமது…!

உலகத்தினர் ஆனைவரும் உறவினரே
என்ற செந்தமிழ் அமுது…!

படை பல கொண்டு தடை பல கடந்து
கொடி அதை நாட்டிய பெருமை…!

பலநூற்றண்டு பர்த்தபின்புமும்
இனியும் தொடரும் இளமை…!

முதல் முதல் மனிதன் அசைத்த நாவில் 
இசையாய் பிறந்த மொழியடா.....!

இது அறவியல் அறிவியல் அறிந்திட புவிக்கு
இயற்கை கொடுத்த விழியடா....!

எத்தனை எத்தனை அற்புதம் படைத்தது
எங்கள் அன்னை மொழியடா....!

இது பிறப்பு இறப்பு இரண்டுமற்ற
இறைமொழி என்று தெளியடா.....!

விலங்கோடு விலங்காய் திரிந்தவனுகு
உழவை கற்றுக் கொடுத்தது.....!

ஆறாம் அறிவை மூலையில் செலுத்தி
மனிதனாய் மண்ணில் படைத்தது.....!

புதிதாய் புதிதாய் சிந்தனை தந்து
அறிவியல் மண்ணில் வளர்த்தது…!


முதல் முதலில் மண்ணில் நாகரிகம்
எம் மொழி தான் சமைத்துக்கொடுதத்து…!  

கல்லணை என்று ஒரு வல்லனை கட்டிய
வல்லவர் பேசிய நன்மொழி…!

இது கடல் பல கடந்தும் கொடியாதை நாட்டிய
மன்னவர் பேசிய வன்மொழி…!

கங்கை கொண்டான்  கடாரம் வென்றான்
எல்லாம் தமிழின மன்னர்கள்…!

தமிழ்க்கடல் தொடங்கி அட்லாண்டிக் வரை
எத்தணை வெற்றிச்சின்னங்கள்….!

கடாரம் மண்ணும் அங்கோர் வாட்டும்
தமிழன் பெருமை உரைக்கும்….!

தமிழன் கட்டிய கிரேக்க பிரமிடை
கண்டால் உடலும் சிலிர்க்கும்….!

பொங்கிடும் கடல் அதில் களம் அதை செலுத்திய
முதல் மகன் தமிழன் தெரியுமா?

புலி கொடிக்கொண்டு பெருநிலம் ஆண்ட
உன் பெருமை வையம் அறியுமா?

அறம் பொருள் இன்பம் வீடுயெல்லம்
இன்னொரு மொழியில் இருக்குதா?

அகத்தையும் புறத்தையும் எம் தமிழ்போல்
இன்னொரு மொழி பிரிக்குதா?

பல்லாயிரம் ஆண்டு இல்லகிய
வளமை எங்காவது இருக்குதா ?

அட தமிழ்போல் எதாவது ஒரு மொழி
காலம் கடந்து நடக்குதா?

தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி 



  1. குறிப்புகள் : கடாரம்இன்றைய மலேசிய சிங்கப்பூர் தாய்லாந்து ஆகிய நிலபரப்புகள்புலி கொடி - சோழன்னின் கொடி  angkor wat

No comments: