13-09-2013 டெல்லி மாணவி கொலை வழக்கில்
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
அகிம்சையால் எதுவும் சாத்தியம் என்று
உலகிற்கு உரக்க சொன்ன காந்தியின் தேசம், உயிர்களை கொல்லுவது பாவம் என்று போதித்த
புத்தனின் பூமி, உயிர் பலியை (மரன தண்டனையை) கைவிட மறுக்குது.
உயிர்யை எடுக்கும் உரிமை எவர்க்கும்
கிடையாது என்ற தேசப் பிதவாம் காந்தியின் தேசம். தன் நாட்டு மக்களின் ஒழுக்கம்
மட்டும் அகிம்சையால் அடையமுடியாத ஒன்று என்று தேசப் பிதாவை மிதிக்குது. மரணம்
ஒருபோதும் தண்டனை ஆகாது, தண்டனை என்பது ஒரு மனிதன் தான் செய்த தவறுக்கு வருந்தி
திருந்திய பிறகு மருபடியும் ஒழுக்கத்துடன் வாழ வாய்ப்பளிபதே தண்டனை ஆகும்.
டெல்லி வன்புணர்வு குற்றவாளிகளுக்கு இன்று
மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்து உள்ளது நீதிமன்றம். ஆனால் இன்றுவரை காஷ்மீரில்
ஆயிரக்கணக்கான ஆப்பாவி இஸ்லாமிய பெண்களும், மலையாக பெண்களும் தொடர்ந்து இந்திய
இராணுவத்தாலும் காவல்காரர்களாலும் வன்புணர்விற்கு ஆளாவதை தொடர்ந்து இந்த தேசம்
மறைக்குது.
ஈழத்தில் ஆயிரக்கணக்கான என் சொந்த
சகோதரிகள் இதே இந்திய சீக்கிய ராணுவத்தால் வன்புணர்வு செய்யப்பட்டு
கொல்லப்பட்டனர், சிங்கள இனவெறி நாய்களால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்,
இன்று வரை கொல்லபடுகின்றனர், அவர்களுக்கு நாங்கள் என்ன தண்டனை கொடுப்பது? ஒசாமா பின்லேடன் தன் நாட்டுக்குள் விமானத்தை
விட்டு இரட்டை கோபுரத்தை தாக்கி இடித்துவிட்டான், அதில் மூவாயிரம் அப்பாவி மக்கள்
இறந்துவிட்டார்கள், அதனால் அவன் பயங்கரவதி தீவிரவாதி என்றது அமெரிக்கா, அதற்க்காக
பத்தாண்டுகள் காத்திருந்து ஏறக்குறைய ஒரு நாட்டையே ஆழித்து, அதே இறையான்மை உள்ள
ஒரு நாட்டுக்குள் அவன் அனுமதியின்றி உள்ள சென்று ஒசாமாவை கொன்றது. இது நியாயம்
என்றால்? அமைதிப்படை என்ற பெயரில் இந்திய சீக்கிய படையை எங்கள் ஈழத்திற்குள்
அனுப்பி பனிரெண்டாயிரத்துகும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்றுகுவித்த கொடுங்கோலன்
ராஜீவ் கான்யை நாங்கள் என்ன செய்ய?
நாற்பது பேரை இந்திய ராணுவம் கனயுந்து(Tank) வைத்து உயிரோடு நசுக்கி கொன்றது இந்த காட்சியை கற்பனை செய்து
பாருங்கள் பெருமக்களே, அந்த காணொளியை நான் பார்த்தபோது ஏறக்குறைய எல்லோரும்
இடுப்புக்குக் கீழ் நசுங்கி இறந்துகிடந்தார்கள், அதையும் விட கொடுமை அதில் ஒரு
ஐந்து வயது பச்சைக் குழந்தை கையெடுத்து கும்பிட்டபடியே இறந்துகிடந்தது, மனிதநேயம்
பேசுகின்ற மகத்தான மாமனிதர்களே அந்த பச்சைக் குழந்தை இந்த பாரத தேசத்திற்கு செய்த
ஒரு தீங்கு உண்டா? இவர்களுக்கு நாங்கள் என்ன தண்டனை கொடுப்பது ? அப்சல் குருவை
இந்த தேசம் துக்கிலிட்டது அதற்க்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு “இவர்மேல் சுமத்த பட்ட குற்றத்தை அரசு தரப்பால் நிருபிக்காமல்விட்டலும்,
இந்த நாட்டு மக்களின் கூட்டு மனசாட்சி யாரையாவது தண்டிக்க வேண்டும் என்பதால்
இவருக்கு மரன தண்டனை விதிக்கபடுகிறது”
இந்த பாரத தேசத்தின் பெருமைக்குரிய தீர்ப்பு இது. போங்கடா நீங்களும் உங்க
தீர்ப்பும்...
No comments:
Post a Comment