Tuesday, August 6, 2013

நாதியற்ற இனத்துக்கு சாதி ஒரு கேடா?

நாதியற்ற இனத்துக்கு சாதி ஒரு கேடா?


இன்று  தமிழ்ச்சமூகத்திலே புறையோடிப்போயுள்ள கொடிய தொற்றுநோய் சாதி. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த இனமான தமிழ்த்தேசிய இனத்தை, அடிமை சிறுபான்மை இனமாக மாற்றியிருக்கும் கேடுகெட்ட நோய்.
ஆதியிலே தமிழர்கள் வெவ்வேறு  தொழிலைச்செய்து வாழ்ந்து வந்தார்கள். இடையிலே வந்த ஆரியர்கள் (பார்ப்பனர்கள்) தமிழர்களை அவர்களின் தொழிலை வைத்து சாதியாய் பிரித்தார்கள்.தமிழர்களுக்குள்ளே உயர்ந்த சாதிஎன்றும், ‘தாழ்ந்த சாதிஎன்றும் சாதியை ஏற்படுத்தி பிளவுப்படுத்தினார்கள்.ஆனால் தமிழர்கள் அனைவர் மீதும் சூத்திரர்பட்டம் கட்டி தமிழர்களையே தாழ்த்தப்பட்டவர்களாகத்தான் கருதினார்கள். தமிழர்களை அண்டி ஒண்டி பிழைக்க வந்த வந்தேறிகளும் தமிழர்களுக்குள்ளே புகுந்து தமிழர்கள் போலே வாழ்வியல்முறையை மாற்றிக்கொண்டும் , தமிழர்கள் போலவே பெயர்களை `வைத்துக்கொண்டும்  தமிழர்களிடத்திலே தமிழ் பேசுதல் இழிவு’ ,’தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா?’ என்று பேசி தமிழர்களை உளவியல் ரீதியாக மாற்றி, தமிழர்களை மொழிப்பற்றையே இழக்கச்செய்தார்கள்.இதனால் தமிழர்கள் தாய்மொழிப் பற்றே அற்று, ஆங்கில அடிமையாய் மாறி, சாதியாய்,மதமாய் பிளவுற்றார்கள்.
இந்து மதத்தை பின்பற்றிய தமிழர்கள்  சமசுகிருதத்திலும், இசுலாமிய மதத்தை தழுவிய தமிழர்கள் அரபியிலும், கிருத்துவ மதத்தை ஏற்ற தமிழர்கள் இன்ன பிற மொழியிலும் வழிப்பட்டார்கள்.இப்படி தமிழர்களை சாதியாகவும், மதமாகவும் பிரித்து தமிழர்என்ற தேசிய இனத்தின்  அடையாளத்தையே இழக்கச் செய்தார்கள், வந்தேறிகள்.ஆனால், இங்கு வந்து குடியேறி பல நூற்றாண்டுகள் கடந்த பிறகும் பார்ப்பனர்கள் தங்கள் அடையாளத்தை இழக்காது, குடுமி வைத்துக்கொண்டும், பூணூல் போட்டுக்கொண்டும் தாங்கள் பார்ப்பனர்களாகவே வாழ்ந்து வந்தார்கள்.தாங்கள் நடத்தும் விடுதிகளுக்கும் உணவகங்களுக்கும் ஆரிய பவன்என்றே பெயர் வைத்தார்கள்.இது போன்றே, தமிழ்மண்ணிலே வந்தேறியாக குடியேறிய தெலுங்கர்களும், மலையாளிகளும்,கன்னடர்களும்  திராவிடர்(?)’ என்ற போர்வையிலே வீதியில் தமிழ் பேசினாலும், வீட்டுக்குள்ளே தங்கள் தாய்மொழியிலேயே பேசிக்கொண்டார்கள்.ஆனால், தமிழர்கள் சாதியையே இனம்எனக்கருதி நீ மள்ளர்!! நான் கள்ளர்!என சொந்த இனத்துக்குள்ளே பிரிவினை பார்த்து, அடித்துக் கொண்டார்கள்.ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்என்பது போல, இதனை எதிர்பார்த்து காத்திருந்த வந்தேறிகள், இந்த வாய்ப்பை  வைத்து  தமிழர்களுக்குள்ளே உள்ள பகைமையை  பயன்படுத்திக்கொண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். விளைவு? பென்னி குக் என்ற மனிதநேயமுள்ள ஆங்கிலேயர் கட்டிய முல்லைப்பெரியாறு
அணை, மலையாளிகள் வசமானது; பாலாறு, தெலுங்கர்களுக்கு போனது; காவிரி, கன்னடர்களுக்கு சொந்தமானது.இதனால் தமிழர்களின் நதிநீர் உரிமைகள் அனைத்தும் பறிபோய், ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்என்று பாடிய தமிழன், விவசாயம் செய்ய நீர் இல்லாது வாடி, தூக்குப் போட்டும்நஞ்சு அருந்தியும் செத்தான்.
 ஆனால், தமிழகத்தின் நெய்வேலியில் உற்பத்தி செய்யப்பட்ட  மின்சாரம்  அண்டை மாநிலங்கள் மூன்றுக்கும் தாரைவார்க்கப்பட்டு, தமிழகம் இருளில் மூழ்கியது.கேரளாவில் இரு மலையாளி மீனவர்கள் இத்தாலி கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட போது துடித்த இந்திய அரசு, இதுவரை இலங்கை (சிங்கள) கடற்படையினரால்     750க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும்நாள்தோறும் நடுக்கடலிலே வைத்து தாக்கப்படுகிறபோதும், அரிவாளால் வெட்டப்படுகிறபோதும் இலங்கை எம் நட்பு நாடுஎன்று சொல்லி வேடிக்கையே பார்க்கிறது. இனம் மொத்தமும் ஈழத்திலே கொன்று குவிக்கப்பட்டபோதும், ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டபோதும், பல்லாயிரக்கணக்கான தமிழச்சிகள் பாலியல் வல்லுறவு கொண்டு படுகொலை செய்யப்பட்டப்போதும் அதனை உரிமை மீறல்(?)’ என்று சொல்லி, ‘இலங்கையில் நடந்த மனித உரிமை மீறலை இலங்கை அரசே விசாரணை செய்ய வேண்டும்என்று  கொலைகாரன் கையிலே விசாரணையை கொடுக்க பார்க்கிறது சர்வதேச சமூகம். ரசியாவிடம் விலை பேசி, தமிழகத்தின்  கூடங்குளத்தில் அணு உலையை நிறுவி, தமிழகத்தை இன்னொரு கிரோசிமா, நாகசாகியாக மாற்ற துடிக்கிறது, இந்தியம். தமிழகத்தின் கொங்கு மண்டலத்திலே கெயில் என்ற நிறுவனத்தின் மூலம் ’எரிவாயு குழாய் பதிப்புஎன்ற பெயரிலேயும், மறுபுறம் சோழ மண்டலத்திலே மண்ணின் வளங்களை சுரண்ட மீத்தேன் எடுப்புஎன்ற பெயரிலேயும் தமிழ் மண்ணை பாழ்படுத்த துணைபோகிறது, இந்திய அரசு. இப்படி தமிழ்த்தேசிய
இனமே அடிமைப்பட்டு கிடக்கிறபோது நாம் ஒரு சாதிய சமூக விடுதலைக்காக போராடிக்கொண்டு(?) இருக்கிறோம்.
இத்தனை பிரச்சனைகளுக்கும், துன்பங்களுக்கும் மூலக்காரணம் தமிழர் நாம், தமிழராய் இல்லாது சாதியாய் மதமாய்பிளவுற்றதே.எனவே, நாளைய தலைமுறை பிள்ளைகளுக்கு தேவர், தேவேந்திரர், வன்னியர், பறையர் எனசாதிய உணர்வை ஊட்டாது, ‘ நாம் தமிழர் என்ற உணர்வை ஊட்டி வளர்ப்போம்;தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம். சாதி மறந்து, மதம் கடந்து தமிழராய்ஒரு குடையின்கீழ் திரள்வோம்.
வன்னியர் தலைமை ஏற்றுவோம்!பறையர் தலைமை ஏற்றுவோம்!என எந்த முழக்கமும் இனி இந்த மண்ணில் செல்லாது! வெல்லாது! இனி ஒரே முழக்கம்தான், தமிழர் நாம் தமிழராய் திரள்வோம்! தமிழர் மண்ணை தமிழரே ஆள்வோம்!!



சுதந்திரத்தை வென்றெடுக்காது  போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும்தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழ வேண்டும்.பயந்து பயந்து பதற்றத்துடன்   வாழ வேண்டும்படிப்படியாக அழிந்து போக வேண்டும்.ஆகவே, சுதந்திரத்திற்காகப் போராடுவதை தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.
- எம் தேசிய தலைவர்  மேதகு வே.பிரபாகரன் அவர்கள்

No comments: