Wednesday, June 26, 2013

தலைவர்களின் பார்வையில் இராமாயணம்...

இராமாயணம் பற்றி மாற்றுக் கருத்தளிவர்கள்

மகாத்மா காந்தி
என்னுடைய ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு. என் ராமன் சீதையின் கணவனல்ல-தசரதன் மைந்தனல்ல. ராமாயணக் கதையில் வரும் ராமனை நான் பூஜிக்கவே மாட்டேன்.
சுவாமி விவேகானந்தர்
தென்னிந்தியாவில் உள்ள மக்களேதான் குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் வர்ணிக்கப்பட்டார்கள்.
ஜவகர்லால் நேரு
ஆரிய திராவிடப் போராட்டமே ராம-ராவண யுத்தம்
ஹென்றிஸ்மித்.
ராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்களென்றும் குடியாதவர்களை,அசுரருகள் என்றும் கூறப்பட்டிருக்கிறது 
ரமேசு சந்திரடட்
ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென்னிந்தியாவில் உள்ளவர்களை, ஆரியர் அல்லாதவர்களைக் குறிப்பதாகும்.
பண்டிதர் பி பொன்னம்பலம் பிள்ளை
ராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாக கூறவும் திராவிடர்களை இழிவுபடுத்திக் கூறவும் எழுதப்பட்ட நூலாகும்.
C.J. வர்க்கி
ராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதை கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்.
ஷோஷி சந்திரடட்
திராவிடர்களை ஆரியர்கள் வென்று விட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால் இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்து பல நாகரீகங்களை இந்த பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்.
சி.பி. காவெல்
விசுணு என்கிற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனைக் கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாக கூறப்பட்டிருக்கிறது.
சந்திரசேகர பாவலர்
சூத்திரன் தவம் செய்யக்கூடாது என்பதற்காகவே ராமன் சம்பூகனை கொன்றான்.
ராவ்சாகிப் திமேசு

இராவணன் சீதையை வலுக்கட்டாயமாகக் கவர்ந்து சென்றான் என்பதற்கு ஆதாரமே கிடையாது..

No comments: